close
Choose your channels
Conjuring Kannappa

கடைசி நேரத்தில் காலைவாரிய மணமகள்: தனக்குத்தானே திருமணம் செய்து கொண்ட மணமகன்!

Friday, November 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாலிபர் ஒருவருக்கு இளம் பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில் திடீரென திருமணத்திற்கு பெண் மணமகள் மறுத்ததால் அந்த வாலிபர் தனக்குத்தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த டியோகோ ரபேலோ என்பவருக்கும் புவெனோ என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் திருமண வேலைகளை விறுவிறுப்பாக கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென புவெனோ மற்றும் டியோகோ ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து புவெனோ தனது திருமணத்தை திடீரென ரத்து செய்ய முடிவெடுத்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த டியோகோ, மணமகள் இல்லை என்றாலும் தன்னுடைய திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்தார். இதன்படி அவர் தனக்கு தானே திருமணம் செய்வதாக தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அவர் தெரிவித்தார்.

மணமகன் டியாகோ தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட நிகழ்வில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 40 பேர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.