அஜித்துக்கு உறவினர் ஆகிறாரா யாஷிகா ஆனந்த்.. நெருக்கமான புகைப்படம் வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித்தின் நெருக்கமான உறவினருடன் நடிகை யாஷிகா ஆனந்த் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து அஜித்துக்கு அவர் உறவினர் ஆகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. இவர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ’திரௌபதி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா ஆனந்த் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ரிஷி பதிவு செய்துள்ளார். இதையடுத்து இருவரும் காதலிக்கின்றார்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இது குறித்து இருவரும் இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும் விரைவில் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டால் நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் அஜித்தின் உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

