எப்போது முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு? புதிய தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், மார்ச் 14ஆம் தேதி முதல் இந்த பாதுகாப்பு நடவடிக்கை அமலுக்கு வர உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபலங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையில், உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் பிரபலங்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால், தேர்தலை முன்னிட்டு அவர் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல் எழுந்ததால் அவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த பாதுகாப்பு உத்தரவு மார்ச் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கு வெளிநாட்டு பவுன்சர்கள் பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில், இனி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 பாதுகாப்பு படை கமாண்டோக்கள் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த பாதுகாப்பு விஜய் தமிழகத்தில் இருக்கும் போது மட்டும் தான் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com