close
Choose your channels
Conjuring Kannappa

எங்க 2 பேருக்கும் ஈக்குவலாக பிளேயர் இருக்காங்களா? விசித்ராவின் கேள்வியால் சர்ச்சை..!

Tuesday, October 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாளே விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து விட்டது என்பதும் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதமும் ஆரம்பித்துவிட்டது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக விசித்திரா இந்த சீசனின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான முதல் புரமோ வீடியோவில் பிக்பாஸ் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதன்படி ’சின்ன பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் சமைக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருந்த நிலையில், அந்த விதிமுறையை மீறி விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் சமையல் செய்தனர். எனவே இவர்கள் இருவரும் சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அறிவித்தார்.

இதனை அடுத்து பிரதீப் அந்தோணி ’அப்படி என்றால் அங்கிருந்து இரண்டு பேர்களை இங்கே அனுப்பி விடுங்கள் என்று கூறினார். உடனே விசித்ரா, ‘எதற்காக அங்கிருந்து இங்கே அனுப்ப வேண்டும் என்று சொல்கிறீர்கள் என கேட்டபோது ’நீங்கள் இரண்டு பேரும் அங்கு செல்கிறீர்கள் அல்லவா, அதற்கு பதிலாக அங்கிருந்து இரண்டு பேர் வரலாம் என்று கூறினேன்’ என்று தெரிவித்தார்.

அப்படியானால் எங்கள் இரண்டு பேருக்கு ஈகுவலான பிளேயர்கள் அங்கே இருக்கிறார்களா? என்ற விசித்ராவின் கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டது. ஆரம்ப கட்டத்திலேயே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.