close
Choose your channels
Conjuring Kannappa

போதை மாத்திரை இல்லாத சினிமா விருந்தே இல்லை: விஷால் பட நடிகை அதிர்ச்சி தகவல் 

Sunday, September 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது தெரிந்ததே. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பற்ற வைத்த இந்த போதை பொருள் நெருப்பு தற்போது கன்னட திரையுலகில் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே தொலைக்காட்சி நடிகை அனிகா மற்றும் திரைப்பட நடிகை ராகினி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து கிடைத்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷால் நடித்த ’ஆம்பள’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மாதவி லதா என்பவர் கூறும்போது ’கன்னட திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் போதைப் பொருள் அதிகமாக பழக்கம் உள்ளது. போதை மாத்திரைகள் இல்லாமல் சினிமா விருந்துகள் நடப்பதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் வழக்கில் இருந்து பல நடிகர் நடிகைகள் தப்பி உள்ளனர் என்றும் அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தப்பித்துள்ளதாகவும் இதுகுறித்த வழக்கை விசாரணை செய்த அதிகாரிகளை வேறு துறைக்கு மாற்றி உள்ளதாகவும் மாதவி லதா குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.