நம்ம கேப்டன் விராட் கோலி வீட்டில் விஷேசம்… டிவிட்டரில் தகவல்!!!


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது டிவிட்டர் பதிவில் “நாங்கள் இனிமேல் 3 பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது” என மகிழ்ச்சி செய்தியை தெரிவித்து இருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இந்த செய்தியை வெளியிட்டவுடன் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவர் இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நடிகை அனுஷ்கா ஷர்மாவும் தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக ஷாருக்குடன் ஷீரோ என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்தார். அதற்குப் பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இந்நிலையில் எப்போ விஷேஷம் எனப் பலரும் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். தற்போது அவர் மகிழ்ச்சி செய்தியை அறிவித்து இருக்கிறார். இதனால் திரைத்துறையினர் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments