ரூ.7 கோடியை விட்டு தந்தாரா விக்ரம்? முடிவுக்கு வருகிறது 'வீர தீர சூரன்' பிரச்சனை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விக்ரம் தனது சம்பளத்திலிருந்து ஏழு கோடி ரூபாயை விட்டுத் தருகிறேன் என்று கூறியதாகவும், இதனை அடுத்து ‘வீர தீர சூரன்’ படத்தின் பிரச்சனை முடிவுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விக்ரம் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவான ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீரென பி4யூ என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக, இன்று காலை 10:30 மணி வரை படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
சேட்டிலைட் உரிமையை பெற்றிருந்த அந்த நிறுவனம், சாட்டிலைட் உரிமைக்கான பிசினஸ் முடிவதற்கு முன்பே படத்தின் ரிலீஸ் செய்ததால்தான் இந்த வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘வீர தீர சூரன்’ படத்திற்கு தடை வந்ததும், விக்ரம் தனது சம்பளத்திலிருந்து 7 கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளதாகவும், இது நேற்றைய பேச்சுவார்த்தையின் போது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பி4யூ நிறுவனம் வழக்கை வாபஸ் பெற முடிவு செய்ததாகவும், இதனால் இன்று மதியத்திற்கு மேல் படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com