மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்.. மணக்க மணக்க தயாராகும் பிரியாணி


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் சமீபத்தில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டதாகவும் இதனை அடுத்து முதல்கட்டமாக நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை கடந்த நவம்பர் மாதம் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின .
பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது ரசிகர்கள் உற்சாகம் அடைந்ததாகவும் அதுமட்டுமின்றி ரசிகர்களுக்கு மணக்க மணக்க சூடான பிரியாணி பரிமாறபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக தற்போது மீண்டும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் இன்று சந்திக்க இருக்கிறார் என்றும் விஜய்யை சந்திக்கும் நிர்வாகிகளுக்கு மணக்க மணக்க மட்டன் பிரியாணி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இன்றைய சந்திப்பில் அடையாள அட்டை வைத்திருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி என்றும் கூறப்படுகிறது.
விஜய் அடுத்தடுத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருவது அவர் ஏதோ பின்னணியில் பெரிய திட்டம் போட்டு இருப்பதாக விஜய் ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments