இரண்டே ஆண்டுக்குள் விவாகரத்து.. விஜய்யின் 'பைரவா' நடிகையின் அதிர்ச்சி முடிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் நடித்த ‘பைரவா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு ஆண்டு முடிவதற்குள் அவர் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யின் அடுத்த ‘பைரவா’ திரைப்படத்தில் நாயகி கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்தவர் அபர்ணா வினோத். இவரது கேரக்டர் தான் இந்த படத்தின் கதைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ‘நடுவன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தில் நிவின் பாலி உள்பட சில பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரனில் ராஜ் என்பவரை காதலித்து அபர்ணா வினோத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இரண்டு ஆண்டு முடிவதற்குள் தற்போது தனது விவாகரத்து முடிவை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து அபர்ணா வினோத் கூறிய போது ’தீவிர ஆலோசனைக்கு பின்னர் என்னுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்து உள்ளேன். இது மிகவும் கடினமான முடிவை தான் என்றாலும் சரியான நேரத்தில் எடுத்த முடிவாக நான் கருதுகிறேன். என்னுடைய திருமணம் உணர்ச்சி வசமாக முடிவெடுக்கப்பட்டு கடினமான சோதனைகளை கடந்து வந்துள்ளது. இப்போது இந்த முடிவை எடுத்தால் மட்டுமே என்னுடைய அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நகர முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments