முதல் திருமண நாள்.. நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவனின் எமோஷனல் பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர்கள் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இந்த நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் திருமண நாள் குறித்தும் நயன்தாரா குறித்தும் எமோஷனலாக பதிவு செய்துள்ளார். அதில் ’என் உயிரோடு ஆதாரமே நீங்கள் தான், ஒரு வருடம் நிறைய தருணங்கள் நிறைந்தது, ஏற்றத்தாழ்வுகள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனையான நேரங்கள் இருந்தது. ஆனால் அபரீதமான அன்பு பாசம் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நீங்கள் என் குடும்பத்தில் இணைந்தீர்கள்.
கனவுகள் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலும் உன்னால் எனக்கு கிடைக்கிறது. என் உயிர் மற்றும் உலகங்களுடன் சேர்ந்து அனைத்தையும் ஒன்றாக வைத்து இருக்கிறேன். குடும்பம் கொடுத்த பலம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது போல் தெரிகிறது. ஒரு நல்ல வாழ்க்கையை, தேவையான ஊக்கத்தை கொடுத்த எனஉனக்கு என்னுடைய நன்றி என்று விக்னேஷ் சிவன் எமோஷனலாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments