'மங்காத்தா' அர்ஜூன் கேரக்டரில் நடிக்க வேண்டியவர் இவரா? இது சமந்தாவுக்கு தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மங்காத்தா’ திரைப்படத்தில் உள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுன் கேரக்டரில் முதலில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டவர் இவர்தான் என்று இயக்குனர் வெங்கட்பிரபு பேட்டில் ஒன்றில் கூறியுள்ள நிலையில் இந்த தகவல் சமந்தாவுக்கு தெரியுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
’மங்காத்தா’ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீஸ் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நாகசைதன்யா என சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த படம் 2011ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த நேரத்தில் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து வந்தார் என்பதால், இந்த தகவல் கண்டிப்பாக சமந்தாவுக்கு தெரிந்திருக்கும் என்றே நெட்டிசன்கள் இந்த பேட்டிக்கு கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.
ஒரு சில காரணங்களால் நாகசைதன்யா ’மங்காத்தா’ படத்தில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது நான் இயக்கும் தமிழ் தெலுங்கு படத்தில் நாக சைதன்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் வெங்கட்பிரபு அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.