பத்ரிநாத் அருகே எனக்கு கோவில் இருக்கிறது.. தென்னிந்தியாவிலும் கோவில் வேண்டும்: பிரபல நடிகை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பத்ரிநாத் அருகில் தனது பெயரில் ஒரு கோவில் இருப்பதாகவும், அதுபோல் தென்னிந்தியாவிலும் ஒரு கோவில் வேண்டும் என்றும் பிரபல நடிகை ஊர்வசி ரவுட்டாலா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லெஜண்ட் சரவணன் நடித்த ‘லெஜண்ட்’ என்ற ஒரே ஒரு தமிழ் திரைப்படத்தில் மட்டுமே நடித்திருக்கும் ஊர்வசி ரவுட்டாலா பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், தெலுங்கு திரையுலகிலும் சில படங்களில் நடித்துள்ளார்,.
சமீபத்தில் ஒரு ஊடகவியலாளர் பேட்டியில், உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே, “ஊர்வசி கோயில்” என்ற பெயரில் தனக்கு ஒரு கோவில் இருக்கிறது என்றும், அந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “மற்ற கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் அங்கு நடைபெறுகின்றன என்றும் கூறியுள்ளார்.
மேலும் “டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் என்னை வழிபடுகிறார்கள். என் புகைப்படங்களுக்கு மலர் தூவி, தன்னை தண்டமாயி என்று அழைக்கிறார்கள்” என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, தென்னிந்தியாவிலும் தனது பெயரில் ஒரு கோவில் வேண்டும் என்ற ஆவலையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவரது இந்தப் பேட்டி வெளியாகிய பிறகு, பலரும் அதிர்ச்சியுடன் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர், “இவரை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்” என்றும், இது கவலைக்கிடமானது என்றும் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com