சாக்கடையில இறங்கினாத்தான் உண்மை கிடைக்கும்: உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி டிரைலர்


Send us your feedback to audioarticles@vaarta.com


உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. இந்த படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் டிரெய்லரில் உள்ள ஒவ்வொரு வசனமும் ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
”எல்லாரும் சமம் என்றால் யார் சார் ராஜா?
அவங்க குடிக்கும்போது அழுக்காகாத தண்ணீர் நாங்க குடிச்சா மட்டும் அழுக்காகி விடுமா?
அவங்க அவங்க இடத்துல அவங்க அவங்கள வைக்கனும், அப்பதான் சமுதாயத்தில் ஒரு பேலன்ஸ் இருக்கும்.
சாக்கடையில் இறங்கினாத்தான் உண்மை கிடைக்கும் என்றால் அந்த சாக்கடையில் இறங்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”.
போன்ற வசனங்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
ஜாதி வெறி பிடித்த ஒரு கிராமத்தில் அடுத்தடுத்து தலித் பெண்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று போராடும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதைதான் இந்த நெஞ்சுக்கு நீதி.
இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’ஆர்ட்டிகிள் 13’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments