பிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்.. வெளியேறியது இந்த 2 போட்டியாளர்களா?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என்றும் பூர்ணிமா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரும் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல் வேறுபட்டதாக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 55 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் மூன்று எக்ஸ் போட்டியாளர்கள் என்ட்ரி ஆவதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்றும் கூறப்பட்டது.
நேரடி நாமினேஷன் செய்யப்பட்ட மாயா, அக்சயா தவிர, மணி, அர்ச்சனா, ரவீனா, விசித்ரா, பூர்ணிமா, பிராவோ ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் 2 போட்டியாளர்கள் அக்ஷயா மற்றும் பிராவோ என சற்று முன் தகவல் வெளியாகியுள்ளன.
அப்படி என்றால் புல்லிங் குரூப்பில் உள்ள பூர்ணிமா தப்பித்து விட்டதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் வெளியே இருந்து வரும் எக்ஸ் போட்டியாளர்கள், புல்லிங் குரூப்புக்கு சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனி அடுத்தடுத்து வரும் எபிசோடுகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments