த்ரிஷா ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா? அவரே அளித்த விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்திற்கு சுமார் 6 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள நிலையில், நேற்று திடீரென அவரது ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகள் வெளியானது. ஆனால் அந்த பதிவுகள் சில நிமிடங்களில் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த பதிவில், "முதல் முறையாக நான் இதை செய்வதை உற்சாகமாக நினைக்கிறேன். எனது சொந்த கிரிப்டோ கரன்சியை உருவாக்கியுள்ளேன். இப்போது அது செயல்பாட்டில் உள்ளது" என்று த்ரிஷா பதிவு செய்தது போல் ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், அதனுடன் ஒரு லிங்க் இணைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. இதேபோல் மற்றொரு கிரிப்டோ கரன்சி பதிவும் வெளியிடப்பட்ட நிலையில், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார்.
"என்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்கும் வரை அதில் பதிவு செய்யப்படும் எதுவும் நான் பதிவு செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நன்றி" என தெரிவித்துள்ளார்.
6 மில்லியன் பாலோயர்களை கொண்ட த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments