வெற்றி நிச்சயம்.. தம்பி தங்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் தம்பி, தங்கைகள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்.
ஏற்கனவே, சில நாட்களுக்கு முன் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கிய தினத்தில் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையிலும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள தம்பிகள், தங்கைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகத்தோடும், துணிவோடும், தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்!" என விஜய் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— TVK Vijay (@TVKVijayHQ) March 27, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com