சென்னை மெரினாவில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தவெக உறுப்பினர்.. அதிர்ச்சி தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஐந்து பேர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அதில் ஒருவர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் என தற்போது செய்தி வெளியாகி கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை நேரில் காண லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர் என்பதுடன், சுமார் 15 லட்சம் பேர் அன்றைய தினம் மெரினாவில் கூடியதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த நிகழ்ச்சிக்கு சரியான ஏற்பாட்டை தமிழக அரசு செய்யவில்லை என்று குற்றம் சுமத்தி இருக்கும் நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் வெப்பம் தாங்காமல் ஐந்து பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனது சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலில் பலியான ஐந்து பேர்களில் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் கார்த்திகேயன் என்பது தெரிய வந்துள்ளது. அவரது கட்சியின் அடையாள அட்டையை தமிழக வெற்றி கழகம் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருப்பதுடன், அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments