ஹைதராபாத் போலீஸாக மாறிய த்ரிஷா: வைரல் புகைப்படம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா திடீரென ஹைதராபாத் போலீஸாக மாறி இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 1999ஆம் ஆண்டு ’ஜோடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் கதாநாயகியாக ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தில் த்ரிஷா நடித்தார் அதன் பின்னர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த த்ரிஷா தற்போது ’பொன்னியின் செல்வன்’ உள்பட சுமார் ஐந்து திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெலுங்கில் உருவாகி வரும் வெப்தொடரான ’பிருந்தா’ என்ற தொடரில் முக்கிய வேடத்தில் த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடரின் டைட்டில் வேடத்தில் நடிக்கும் த்ரிஷா, ஹைதராபாத் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹைதராபாத் போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.