'அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடிய திருடனின் கடிதம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரொக்கம், நகைகள் மற்றும் விருதுகள் திருடு போன நிலையில் அவற்றை திருடி சென்ற திருடன் தன்னை மன்னிக்குமாறு கடிதம் எழுதி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’காக்கா முட்டை’ ’கடைசி விவசாயி’ ஆகிய தேசிய விருது பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டனின் சொந்த ஊரான தேனியில் உள்ள வீட்டில் திருடு போனது. அவரது வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், நகைகள் மற்றும் அவர் வாங்கிய தேசிய விருதுகள் திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவில் திடீரென மணிகண்டன் வீட்டு வாசலில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை திருடர்கள் திருப்பி வைத்து சென்றுள்ளனர்.
அந்த கடிதத்தில் ’ஐயா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் திருடிய தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களையும் அந்த கடிதத்துடன் அவர்கள் தொங்கவிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் திருடு போன ரொக்கம் மற்றும் நகைகள் கிடைத்ததா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com