'ஜெய்பீம்' படத்தில் சூர்யா கேரக்டரில் நடிக்கவிருந்தவர் இந்த பிரபல நடிகரா?


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஒருசில அமைப்புகள் மற்றும் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தாலும் ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இந்த படத்திற்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா, சந்துரு என்ற வழக்கறிஞர் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும், இந்த கேரக்டர் அனைவர் மனதிலும் நிற்கும் அளவுக்கு சூர்யாவின் நடிப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதலில் இந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் யார் என்பது குறித்து ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்கள் விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் சிவக்குமார் வீட்டிற்கு சென்றிருந்ததாகவும் அப்போது சூர்யாவிடம் மனம் விட்டு அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் ’ஜெய்பீம்’ திரைப்படம் குறித்த பேச்சு வந்தபோது இந்த படத்தை சின்ன அளவில் எடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் சந்துரு கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவே திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் சூர்யா தெரிவித்தார் என்றும், அதன்பின்னர் சந்துரு கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைவதை அடுத்து தானே இந்த கேரக்டரில் நடிக்க முடிவு செய்ததாகவும் சூர்யா தன்னிடம் தெரிவித்ததாக ஓவியர் மருது தெரிவித்துள்ளார்.
ஒருவேளை முதலில் திட்டமிட்டிருந்தபடி ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் எப்படி இருக்கும் என்ற கருத்தையும் தற்போது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments