ஹோலி கொண்டாடிய சிலமணி நேரத்தில் சீரியல் நடிகை பலி: அதிர்ச்சி தகவல்


Send us your feedback to audioarticles@vaarta.com


ஹோலி பண்டிகை கொண்டாடிய சில மணி நேரத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் கார் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி மற்றும் வெப்தொடர் நடிகை காயத்ரி. இவர் கடந்த 18ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு திரும்பினார். காரை அவரது ஆண் நண்பர் ரோகித் என்பவர் ஓட்டியதாகவும், மேலும் இருவரும் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென கார் ரோகித்தின் கட்டுப்பாட்டை மீறி மகேஸ்வரி என்ற பெண்ணின் மீது மோதியதாகவும் இந்த விபத்தில் மகேஸ்வரி மற்றும் காரில் இருந்த காயத்ரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயத்ரியின் ஆண் நண்பர் ரோகித் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனை அடுத்து மூன்று பேர்களை பலிகொண்ட இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தெலுங்கு சின்னத்திரையுலகின் முன்னணி நடிகையான காயத்ரியின் மறைவை அடுத்து திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments