close
Choose your channels

கல்லூரி காலத்தில் இந்த தமிழ் நடிகை ஒரு கால்பந்து வீராங்கனையா? வைரல் புகைப்படங்கள்!

Wednesday, December 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக கோப்பை கால்பந்து திருவிழா சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் கால்பந்து போட்டியில் நட்சத்திர நாயகன் மெஸ்ஸிக்கு உலகமே வாழ்த்துக்களை தெரிவித்து என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் கல்லூரி காலத்தில் தானும் ஒரு கால்பந்து வீராங்கனை என தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் ’அருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் அதிதி பாலன் என்பது தெரிந்ததே. தற்போது அவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சமந்தாவுடன் அவர் நடித்து முடித்துள்ள ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அதிதி பாலனுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் நானும் கல்லூரி காலத்தில் ஒரு கால்பந்து வீராங்கனை தான் என்று குறிப்பிட்டு அது குறித்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். கல்லூரி காலத்தில் உள்ள புகைப்படங்களில் அதிதி பாலன் கால்பந்து வீராங்கனையாக இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.