கடலில் டைவ் அடித்து சான்றிதழ் வாங்கிய தமிழ் நடிகை.. வைரல் புகைப்படங்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடலில் டைவ் அடித்து சான்றிதழ் வாங்கிய தமிழ் நடிகை ஒருவரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் படமான ’கோமாளி’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வார் என்பதும் அது மட்டுமின்றி பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபடுவார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கடலில் டைவ் செய்ததற்காக சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த சான்றிதழை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது அங்கு அவர் கடலில் அடித்த சாதனையை செய்துள்ள நிலையில் அவருக்கு இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதன் முறையாக டைவிங் செய்தபோது தனது வாழ்க்கையே மாறி விட்டதாகவும் தற்போது ஆறு கடல் ஏரி என்று எங்கு பார்த்தாலும் அதை ஆராய்வதற்காக சென்று விடுவேன் என்றும் உலகம் முழுவதும் இது குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் சான்றிதழை பெற்றதாகவும் தற்போது தாய்லாந்து பயணத்தின் போது மீண்டும் சான்றிதழ் கிடைத்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments