உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய சூர்யா: புகைப்படங்கள்


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த வாரம் சூர்யா ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது சூர்யா அந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சம்பவத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் சூர்யாவுக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அவரது படம் வெளியாகும் போது ரசிகர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் சூர்யா ரசிகர் மன்ற செயலாளராக கடந்த சில ஆண்டுகளாக இருந்தவர் ஜெகதீஷ். இவர் கடந்த வாரம் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளர்ஜெகதீஷ் மறைவு குறித்த அறிந்த சூர்யா, அவரது வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவரது குழந்தைகளுக்கும் அவர் ஆறுதல் கூறிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது ரசிகர் மன்றத்தின் செயலாளர் இறந்த சம்பவம் கேட்டு அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யாவின் மனிதாபிமானத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.