வயநாடு நிலச்சரிவு: சூர்யா, கார்த்தி, ஜோதிகா சேர்ந்து கொடுத்த பெரும் தொகை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள், தொழில் அதிபர்கள் நிதியுதவி செய்து வரும் நிலையில் நடிகர்கள் சூர்யா. கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு அருகே உள்ள மூன்று மலை கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் உயிருடன் புதைந்துள்ள நிலையில் மீட்டு பணிகள் அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடிகர் விக்ரம் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு 20 லட்சம் ரூபாய் கேரள முதல்வரிடம் நிதி நிவாரணம் அளித்தார். அதேபோல் நேற்று நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வயநாடு பகுதியில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் இன்று சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகிய மூவரும் சேர்ந்து 50 லட்சம் ரூபாய்க்கு கேரள முதல்வரிடம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments