close
Choose your channels
Veeran
Kaadhar
Porthozhil

வரிசையில் நின்று வாக்களித்த சூர்யா, கார்த்தி, ஜோதிகா!

Thursday, April 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் திரையுலக பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோர் ஏற்கனவே இன்று காலை வாக்களித்துவிட்டனர். சற்றுமுன் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி ஆகியோர் சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

அதேபோல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மகள் ஸ்ருதிஹாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாக்களித்தார். கமல்ஹாசன் வாக்கு போட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் அவர் சில நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை குஷ்பு, நடிகர் கெளதம் கார்த்தி, சென்னை மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர்  கமீலாவின் கணவரும் நடிகருமான  நாசர், நடிகர் விஜய் ஆண்டனி உள்பட பலர் வாக்களித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.