close
Choose your channels
Veeran
Kaadhar
Porthozhil

திரையரங்குகளில் ரிலீஸாகும் 'சூரரைப்போற்று'  மற்றும் 'ஜெய்பீம்': எப்போது தெரியுமா?

Monday, July 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது

ஓடிடியில் வெளியாகியே இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வசூலிலும் சாதனை செய்து இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து சூரரைப்போற்று மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

சென்னை பாடியில் உள்ள முக்கிய திரையரங்கில் ’சூரரைப்போற்’று மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஜூலை 23ஆம் தேதி திரையிட உள்ளதாகவும் இதற்கான டிக்கெட் புக்கிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓடிடியில் இந்த படங்களை பார்த்த சூர்யா ரசிகர்கள் பெரிய திரையில் இந்த படத்தை பார்த்து மகிழ ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.