உறுதி செய்யப்பட்டது சூர்யாவின் வாடிவாசல்.. மாட்டுப் பொங்கல் தினத்தில் ஒரு சூப்பர் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், "வாடிவாசல்" என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ’விடுதலை’ மற்றும் ’விடுதலை 2’ படங்களின் ரிலீசுக்கு பிறகு, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ’விடுதலை 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியானதால், "வாடிவாசல்" தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இந்தந் இலையில் இன்று, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தனது சமூக வலைத்தளத்தில், "அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது" என்று குறிப்பிட்டு, வெற்றிமாறன் மற்றும் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம், "வாடிவாசல்" திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், அந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
"வாடிவாசல்" திரைப்படம் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாகலாம் என கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், படத்தின் ஆரம்பகட்ட பணிகள், குறிப்பாக கிராபிக்ஸ் தொடர்பான பணிகள் ஏற்கனவே சில மாதங்களாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு, சூர்யா ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com