close
Choose your channels
Veeran
TheeraKaadhal

முதல் வாரம் சிம்பு, இரண்டாம் வாரம் சூர்யா.. பக்கா திட்டமிடும் தயாரிப்பு நிறுவனம்..!

Thursday, February 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் சிம்பு படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பிப்ரவரி முதல் வாரம் சிம்பு படத்தின் அப்டேட்டையும் இரண்டாவது வாரம் சூர்யா படத்தின் அப்டேட்டையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் என்பதும் இந்நிறுவனத்தை ஞானவேல் ராஜா பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிம்பு நடித்துள்ள ’பத்து தல’ மற்றும் சூர்யா நடித்துவரும் ’சூர்யா 42’ ஆகிய படங்களை தயாரித்து வரும் ஞானவேல் ராஜா, நாளை அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி சிம்பு பிறந்த நாளில் ’பத்து தல’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளார். ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்த பிப்ரவரி இரண்டாவது வாரம் சூர்யாவின் 'சூர்யா 42’ படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 42’ படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ‘சூர்யா 42’ படத்தை திருவிழா நாளில் வெளியிட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.