close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படம் 10 பாகங்களா? அவரே அளித்த தகவல்..!

Thursday, May 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலியின் அடுத்த படம் 10 பாகங்களாக உருவாக வாய்ப்பு இருப்பதாக அவரே அளித்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ இரண்டு பாகங்கள் வெளியானது என்பது தெரிந்ததே. மேலும் தற்போது அவர் இயக்க இருக்கும் மகேஷ் பாபுவின் படமும் இரண்டு பாகங்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜமெளலியிடம், ‘266 எபிசோடுகளாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதத்தை நீங்கள் படமாக்கினால் எத்தனை பாகங்களாக எடுப்ப்பீர்கள்’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராஜமௌலி ‘மகாபாரதம் படமாக உருவானால் நிச்சயம் 10 அல்லது அதற்கு மேல் பாகங்கள் எடுக்க வேண்டிய நிலை வரும். இப்போதே எத்தனை பாகங்கள் என்பதை சரியாக கணிக்க முடியாது’ என்றும் தெரிவித்தார். மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்றும் ஆனால் அதற்கு நிறைய காலம் பிடிக்கும், அதாவது மகாபாரதத்தை முழுமையாக எடுப்பதற்கு எனக்கு 10 அல்லது 12 ஆண்டு காலம் தேவைப்படும்’ என்றும் அவர் கூறினார்.

எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் மகாபாரதம் உருவானால் அது காலத்தால் அழியாத காவியமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்காது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.