நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, கொலை.. பிரபல நடிகர் மீது அதிர்ச்சி புகார்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல நடிகை சௌந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் 20 வருடங்களுக்கு முன் காலமான நிலையில், அவரது மரணம் விபத்து அல்ல, கொலை என்று ஆந்திராவை சேர்ந்த சிட்டி மல்லு என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி, நடிகை சௌந்தர்யா தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்றபோது, அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், ஆந்திராவை சேர்ந்த சிட்டி மல்லு என்பவர், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் சௌந்தர்யாவின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யாவின் ஜல பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை, மோகன் பாபு பெற நினைத்ததாகவும், அந்த நிலத்தை சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் விற்பனை செய்ய முடியாது என்று கூறியதை அடுத்து, மோகன் பாபு அழுத்தம் கொடுத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சௌந்தர்யாவின் மரணத்திற்கு பிறகு, அந்த நிலத்தை சட்டவிரோதமாக மோகன் பாபு கைப்பற்ற முயன்றதாக கூறிய சிட்டி மல்லு, இதே புகாரில் மோகன் பாபுவுக்கும், அவரின் இளைய மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையிலான மோதலையும், மஞ்சு மனோஜ் நிதி கோரிய விவகாரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, கொலை என்றும், நடிகர் மோகன் பாபுவிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com