சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர்... 'விடாமுயற்சி' நடிகை தெரிவித்த அதிருப்தி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை, சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் என்று தனது அதிருப்தியை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை ரெஜினா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,
"பொதுவாக பெரிய பட்ஜெட் படங்களில் பெண் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பல பெரிய பட்ஜெட் படங்களில் பெண் கேரக்டர்கள் மோசமாக எழுதப்பட்டிருந்ததால் ஏமாற்றமடைந்தேன். ஆனால், ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் பணிபுரிந்தது எனக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது.
இந்த கேரக்டரை என்னைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என இயக்குனர் மகிழ் திருமேனி எனக்கு நம்பிக்கை அளித்தார். எனக்காக ஒரு போல்டான கேரக்டரை அவர் எழுதி இருப்பார் என்று நம்பினேன். ஒரு சிக்கலான கதாபாத்திரத்தை என்னால் நியாயப்படுத்த முடியும் என்று நம்பியதற்கு, இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு படத்தில் பெண் கேரக்டர் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்துதான் அந்த படத்தின் வலிமையும் உண்டு. அதனால்தான் நான் இயக்குனர்களை முழுமையாக நம்புகிறேன். ஆனாலும், சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். அதனால் தான் ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்யும் போது, என்னுடைய கேரக்டருக்கு தனித்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com