மகன், மகளுடன் இளையராஜாவை சந்தித்த சிவகுமார்.. அன்புடன் கொடுத்த சிறப்பு பரிசு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இசைஞானி இளையராஜாவை, பழம்பெரும் நடிகர் சிவகுமார் தனது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து சந்தித்து, அவருக்கு தங்க சங்கிலியை அன்பு பரிசாக கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இசைஞானி இளையராஜா சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இதனை அடுத்து, அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உள்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ் திரை உலகின் மூத்த நடிகர் சிவகுமார், தனது மகன் நடிகர் சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகிய இருவருடன் சென்று, இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார்.
இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com