சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம் டிராப்பா? வேறொரு நடிகர் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும், இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், திடீரென இந்த படம் டிராப் அல்லது ஒத்திவைப்பு என்ற தகவல் கோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான ’டான்’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில், சிபி சக்கரவர்த்தியின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் உட்பட சில பிரபலங்கள் நடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தையே அவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கான திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்ததாகவும், படப்பிடிப்பு ஆரம்பிப்பது மட்டுமே மீதியாக உள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் ’பராசக்தி’ உள்ளிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால், இந்த படம் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலையில், தற்போது அவர் ’பராசக்தி’ படத்தில் கமிட்டாகி இருப்பதால், சிபி சக்கரவர்த்தி இந்த படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், அடுத்ததாக நானி படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இன்னொரு தரப்பினர் சிவகார்த்திகேயன் படத்திலிருந்து சிபி விலகவில்லை என்றும், நானி படத்தை இயக்கி முடித்துவிட்டு, மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவார் என்றும் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com