என்னவா இருக்கும்? ஒரே நேரத்தில் செல்வராகவன், கெளதம் மேனன், ஆர்யா, சந்தானம் போட்ட பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன், நடிகர்கள் ஆர்யா மற்றும் சந்தானம் ஆகிய நால்வரும் ஒரே நேரத்தில் தங்களது சமூக வலைதளங்களில் ’நெக்ஸ்ட் லெவல்’ என்ற ஒரு பதிவை செய்துள்ள நிலையில் அது என்னவாக இருக்கும் என்று சினிமா ரசிகர்கள் ஆழ்ந்த குழப்பத்தில் உள்ளனர் .
சற்றுமுன் இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் ’நெக்ஸ்ட் லெவல்’ என்ற வாசகங்களுடன் தங்களுடைய புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதேபோல் தனது புகைப்படத்துடன் உள்ள ‘நெஸ்ட் லெவல்’ போஸ்டரையும் ஆர்யா மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த நான்கு பேரும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அனேகமாக இந்த படம் ’டிடி ரிட்டர்ன்ஸ் 3’ படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் கௌதம் மேனன் அளித்த பேட்டியில் சந்தானம் நடிக்க உள்ள ’டிடி ரிட்டன்ஸ்’ மூன்றாம் பாகத்தில் தான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதே படத்தில் செல்வராகவனும் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் மேற்கண்ட நால்வர் மட்டுமின்றி நடிகை கஸ்தூரியும் இது குறித்த பதிவு செய்துள்ளதால் அவரும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளார் என்று தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com