கூல் சுரேஷுக்கு கார் பரிசளித்த பிரியாணி கடை ஓனர்.. பாட்டு பாடி தெரிவித்த நன்றி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கூல் சுரேஷுக்கு சேலத்தைச் சேர்ந்த பிரியாணி கடை ஓனர் கார் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சேலத்தைச் சேர்ந்த பிரபல பிரியாணி கடை ஓனர் ஒருவர் கூல் சுரேஷை அழைத்து புத்தம் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூல் சுரேஷ் அவருடைய ஓட்டலுக்கு சென்று சாப்பிட்ட போது ஆட்டோவில் வந்ததாக கூறியிருந்தார். அப்போது உங்களுடைய கார் எங்கே என்று அவர் கேட்டதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது சென்னையில் வெள்ளம் வந்தது, அப்போது என்னுடைய கார் போய்விட்டது என்று பதில் அளித்ததாகவும், தற்போது தன்னிடம் கார் இல்லை என்று கூறியதாகவும் கூல் சுரேஷ் தெரிவித்தார்.
இதனை அடுத்து அந்த பிரியாணி கடை ஓனர் இரண்டு நாள் கழித்து நான் போன் செய்கிறேன் வா என்று கூறியதாகவும், நான் கூட பிரியாணி சாப்பிட தான் கூப்பிடுகிறார் என்று நினைத்தேன், இங்கு வந்து பார்த்தால் ஒரு புத்தம் புதிய காரை என் முன் நிறுத்தி இது உன்னுடைய கார் தான் வைத்துக்கொள்’ என்று கூறினார். இதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன்’ என்று கூல் சுரேஷ் தெரிவித்தார்.
இதனை அடுத்து ’அவர் அன்பை விதைக்கிறார் அது ஆலமரமான வளர்கிறது, பண்பை விதைக்கிறார் பலாப்பழம் போல் வளர்கிறது, நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் வளரும், ஐயா அவர்களுக்கு எனது நன்றி என்று கூறிய கூல் சுரேஷ் ’அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே’ என்ற பாட்டை பாடி நன்றி தெரிவித்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments