சாச்சனாவின் வெளியேற்றத்திற்கு உண்மை காரணம் இதுதானா? மீண்டும் ரீஎண்ட்ரி?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பித்த நிலையில் 24 மணி நேரத்தில் போட்டியாளர்களில் ஒருவரான சாச்சனா வெளியேற்றப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு போட்டியாளரை 24 மணி நேரத்தில் அவர் அந்த போட்டிக்கு தகுதி இல்லாதவர் என்ற முடிவுக்கு எப்படி வரலாம் என பார்வையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. பிக் பாஸ் எட்டாவது சீசனை கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதால், டிஆர்பி எப்படி இருக்கும் என்பது தெரியாததால், ஏதேனும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சாச்சனா வெளியேற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.
கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதால், பெரிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய தயங்குவதால், முதல் நாளிலேயே அதிரடியை ஏற்படுத்தினால், தான் இந்த நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் என்று நினைத்ததால், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் டீம் நினைத்தபடியே தற்போது நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பார்வையாளர்களின் மத்தியில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. இதனை அடுத்து பார்வையாளர்களை சமாதானப்படுத்த, மீண்டும் சாச்சனா உள்ளே வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் சில வாரங்களில் அவர் வைல்டு கார்டு என்ட்ரியா வருவார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் மற்ற சீசன்களில் இல்லாத பல திடுக்கிடும் திருப்பங்கள் இந்த சீசனில் இருக்கும் என்று கூறப்படுவதால், டிஆர்பிக்கு பஞ்சம் இருக்காது என கணிக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments