நான் விவாகரத்து கொடுத்துட்டேன்.. பிக்பாஸ் ரேஷ்மா பசுபலேட்டி பேட்டி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரேஷ்மா பசுபலேட்டி , சமீபத்தில் அளித்த பேட்டியில், ’பாக்கியலட்சுமி’ தொடரில் ஹீரோ கோபிக்கு நான் விவாகரத்து கொடுத்து விட்டேன் என்றும், இன்னும் அந்த சீரியல் எத்தனை நாள் போகும் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
"தற்போது ’பாக்கியலட்சுமி’ மற்றும் ’கார்த்திகை தீபம் 2 ’ஆகிய இரண்டு சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறேன். ’பாக்கியலட்சுமி’ ராதிகா கேரக்டர் எனக்கு நான்கு வருடங்களாக பழகிவிட்டது. இப்போதுதான் நான் கோபிக்கு விவாகரத்து கொடுத்து விட்டேன், அதனால் அந்த சீரியலில் குறைவாகவே வருகிறேன். இன்னும் சீரியல் எத்தனை நாள் போகும் என்று எங்களுக்கே தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை, நான் ஹீரோவுக்கு விவாகரத்து கொடுத்துவிட்டேன், அவ்வளவுதான்," என்று கூறினார்.
’கார்த்திகை தீபம் 2’ தொடர் குறித்து பேசும்போது, "இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் எனக்கு கொஞ்சம் கடினமான ரோல் தான். நான் கார்த்திக் அவர்களுடன் நடிக்கிறேன். வடிவுக்கரசி அம்மாவின் நிறைய காட்சிகள் இருக்கின்றன.
வடிவுக்கரசி எனக்கு ஊக்கம் கொடுப்பார். அவர் கூட நடிக்கிறதே, எனக்கு அது பெரிய பெருமையாக இருக்கிறது. பார்ப்பதற்கு தான் அவர் கொஞ்சம் கடினமாக இருப்பார், ஆனால் அவருடைய மனசு ரொம்ப சாப்ட். அது நிறைய பேருக்கு தெரியாது," என்று கூறினார்.
மேலும், தன்னை பற்றி சமூக வலைதளங்களில் நெகட்டிவ் கமெண்ட் செய்வோரை பற்றி, தான் ரியாக்ட் பண்ணுவதில்லை. நான் லிப் சர்ஜரி செய்ததாக பலர் கூறுகின்றனர், ஆனால் அந்த அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை," என்று கூறினார்.
இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com