இலங்கையில் 'பராசக்தி' படப்பிடிப்பு.. இன்ப அதிர்ச்சியாய் பிரபலத்தை சந்தித்த ரவி மோகன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இலங்கையில் தற்போது ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்காக சென்ற ரவி மோகன், அங்கு இன்ப அதிர்ச்சியாக கிரிக்கெட் பிரபலம் ஒருவரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இலங்கையில் உள்ள முக்கிய பகுதிகளில் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பராசக்தி படக்குழுவில் உள்ள ரவி மோகன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்தார். அப்போது, இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ப்ரித்விராஜ், குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது இவரது 100வது படம் ஆகும். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 250 கோடி ரூபாய் ஆகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com