உலக யோகா தினத்தில் ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் உலக யோகா தினம் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் பெருமை குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்பதும் இன்றும் அவர் யோகா குறித்து உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு பிரபல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் யோகா செய்ததன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்
அந்த வகையில் சற்றுமுன் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் கடற்கரையில் செய்த யோகாவின் போட்டோஷூட் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ரம்யா பாண்டியன் இந்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவில் கேப்ஷனாக ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது: யோகா என்பது நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் ஒவ்வொரு மூச்சிலும் உள்பாதுகாப்பை உருவாக்குகிறது’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.