close
Choose your channels
Veeran
TheeraKaadhal

'என் ராசாவின் மனசில 2': 20 வயதில் இயக்குனராகும் பிரபல நடிகரின் மகன்!

Monday, February 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய ’என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படம் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியானது. இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்த இந்த படத்தில் மீனா நாயகியாக நடித்து இருப்பார் என்பதும் வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தின் மூலம்தான் திரையுலகில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 30 வருடம் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது

இந்த திரைப்படத்தை முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் மகன் திப்புசுல்தான் நைனார் முகமது என்பவர் இயக்கவிருக்கிறார். இவர் இயக்கும் முதல் படம் இதுதான் என்பது இவருக்கு இன்று 20 ஆவது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து ராஜ்கிரண் கூறியிருப்பதாவது: இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் இருபதாவது பிறந்த நாள். என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரே இந்தப் படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.