close
Choose your channels

கடலோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: வீடியோ மூலம் ரஜினிகாந்தின் அறிவுரை!

Sunday, March 23, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

"வணக்கம் அனைவருக்கும்!

நம் நாட்டின் அமைதி, மகிழ்ச்சி, பாதுகாப்பு இவற்றை பாதிக்க சிலர் முயற்சி செய்வார்கள். பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கொடூர சம்பவங்களை ஏற்படுத்திய முன்னுதாரணம் மும்பை 26/11 தாக்குதல். அந்த பரிதாபகரமான நிகழ்வில் 175 பேர் உயிரிழந்தனர்.

கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் சுற்றித் திரிந்தால், உடனே அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த விழிப்புணர்வை அதிகரிக்க 100 சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 7,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்கள்.

அவர்கள் உங்கள் பகுதியில் வந்தால், அவர்களை உற்சாகப்படுத்துங்கள். முடியுமானால் அவர்களுடன் சிறிது தூரம் பயணம் செய்து ஆதரவை வெளிப்படுத்துங்கள்.

நன்றி. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த்!"

இவ்வாறு ரஜினிகாந்த் தனது வீடியோவில் அறிவுரை வழங்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment