ரஜினி, கமல் கலந்து கொள்ளும் பிரமாண்டமான விழா.. நேரில் கொடுக்கப்பட்ட அழைப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து வரும் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ’கலைஞர் 100’ என்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக நடிகர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆகியோர் நேரில் சென்று ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரை உலகம் சார்பில் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளதாகவும் அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments