close
Choose your channels

 பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர்.. முதல் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பார்த்திபன்..

Wednesday, March 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க தயாராக இருப்பதாக நடிகரும் இயக்குனருமான ஆர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை பழம்பெரும் நடிகர் எம்கே தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு உண்டு என்பதும் இவர் நடித்த ’ஹரிதாஸ்’ என்ற திரைப்படம் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் மூன்று தீபாவளிகளை தாண்டி ஓடி சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது நடிப்பில் உருவான ’பவளக்கொடி’ ’அம்பிகாபதி’ ’திருநீலகண்டர்’ ’சிவகவி’ ’அசோக்குமார்’ உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரையுலகின் உச்சத்தில் இருக்கும்போது ஆடம்பரமாக வாழ்ந்த தியாகராஜ பாகவதர், தனது வாழ்க்கையின் கடைசி காலங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தியாகராஜ பாகவதரின் 114 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க தன்னிடம் திரைக்கதை உள்ளது என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

First super star of tamilnadu!!!!!!!
புகழின் உச்சம் கண்டவர்.மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர்.பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். Last reel மிக மோசமான சோகம்! பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.