close
Choose your channels

முதல்வர் ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்தது ஏன்? ரோபோ சங்கரின் மனைவி விளக்கம்..!

Tuesday, September 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களாக பிரபலங்களை சந்தித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான என்றும் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக அல்ல என்றும் அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவர் தனது நெருங்கிய உறவினரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்திராஜாவின் திருமண பத்திரிகை வைப்பதற்காக தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களை குடும்பத்துடன் சந்தித்ததாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் விளக்கம் அளித்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னாள் பிரபலங்களுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக தான் என்றும் திருமண அழைப்பு வைப்பதற்காக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உடனான ரோபோசங்கர் குடும்பத்தின் சந்திப்பு நான்கு நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் இன்று தான் முதல்வர் அலுவலகத்தில் இருந்து புகைப்படங்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரோபோ ஷங்கர் மகளின் திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன் ரோபோ ஷங்கர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், முதல்வர் நலம் விசாரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன் முதல்வரை குடும்பத்துடன் சந்தித்த ரோபோ சங்கர், சில நாட்களுக்கு முன்னர் அதிமுக மாநாட்டில் நிகழ்ச்சி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.