close
Choose your channels
Veeran
TheeraKaadhal

'நீ என்னை பார், நான் உன்னை பார்க்கிறேன்': ப்ரியா அட்லியின் ரொமான்ஸ் பதிவு!

Saturday, May 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி தனது சமூக வலைத்தளத்தில் ’நீ என்னை பார், நான் உன்னை பார்க்கிறேன்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ள ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய் நடித்த ’தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ என மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. தற்போது அவர் ஷாருக்கான், நயன்தாரா நடித்துவரும் ’லயன்’ என்ற பாலிவுட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண ப்ரியாவை இயக்குனர் அட்லி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு டாட்டா காட்டிய பிரியா அட்லி சமூக வலைதளங்களில் பிரபலமானார். அட்லி உடன் உள்ள ரொமான்ஸ் புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார் என்பதும், அவரது பதிவுகள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்றுமுன் ப்ரியா, அட்லியுடன் இருக்கும் இரண்டு ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து, ‘நீ என்னை பார், நான் உன்னை பார்க்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.