close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2' முதல் நாளே இத்தனை கோடி வசூலா? ஆச்சரியத்தில் திரையுலகினர்..!

Saturday, April 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் சூப்பராக இருக்கிறது என்றும் முதல் பாகத்தை விட விறுவிறுப்பாக இருக்கிறது என்றும் தெரிவித்து வருகின்றனர்

குறிப்பாக விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர்களின் நடிப்பு கச்சிதம் எனக் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் டிக்கெட் முன்பதிவில் மட்டும் 15 கோடி வசூல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. இதன்படி முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் 65 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த படம் 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் உலக நாடுகளில் சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றும் நாளையும் சனி ஞாயிறு விடுமுறை மற்றும் மே 1ஆம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை என மூன்று தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் நான்கு நாட்களில் சேர்த்து மிகப்பெரிய வசூலை எட்டு என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.500 கோடி வசூல் செய்த நிலையில் அதைவிட இரண்டாம் பாகம் அதிகமாக வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபீஸ் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.