'புஷ்பா' போஸ்டரை குறிப்பிட்டு போலீஸார் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் வெளியான பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளிலும் ஹிந்தியிலும் கூட வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’புஷ்பா’ திரைப்படத்தின் புகைப்படத்தை பயன்படுத்தி ஒடிசா மாநில போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். ’புஷ்பா’ போஸ்டரில் இருசக்கர வாகனத்தில் அல்லு அர்ஜுன் செல்வது போன்ற புகைப்படத்தை பதிவு செய்து ’ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் ’புஷ்பா’வாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அபராதம் விதிக்கப்படும் என்றும் ஹெல்மெட் இன்றி பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் பதிவு செய்துள்ளனர்.
தற்போது வடமாநிலங்களில் ’புஷ்பா’ திரைப்படம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ’புஷ்பா’ திரைப்படத்தின் அல்லு அர்ஜுன் போஸ்டரை பயன்படுத்தி ஒடிசா மாநில போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.