தெலுங்கானா தேர்தல்: அனைத்து தொகுதியிலும் பவன் கல்யாண் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஐந்து மாநில தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் நான்கு மாநிலத்தில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தெலுங்கானா தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது என்பதும் தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்டது. பவன் கல்யாண் கட்சிக்கு பாஜக 8 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் அவருடைய கட்சியின் 8 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து விட்டதாக கூறப்படுகிறது
தெலுங்கானாவில் பவன் கல்யாண் கட்சி ஒரு சதவீத கூட தனது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அங்குள்ள அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் நடிகர்கள் ஆரம்பித்த கட்சி எந்த விதமான தாக்கத்தையும் அரசியலில் ஏற்படுத்தவில்லை என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com