'பருத்திவீரன்' விவகாரம்': அமீருக்கு விழுந்த இன்னொரு ஓட்டு.. பிரபல தயாரிப்பாளர் ஆதரவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில நாட்களாக ’பருத்திவீரன்’ விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமீருக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். சமுத்திரக்கனி, பாரதிராஜா, சசிகுமார், சினேகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் இதுகுறித்து கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது
அமீர் ஒரு தரமான தயாரிப்பாளர். அவர் தான் கார்த்தியையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தையும் அடையாளப்படுத்தினார். எனவே அவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
படத்தை லேட்டாக கொடுத்தார் என்று ஞானவேல் ராஜா கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அமீர் ஒரு கிரியேட்டர். ஒவ்வொரு கிரியேட்டருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அமீர் நாளையே சூர்யா அல்லது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்’ என்று கூறினார்.
இந்த நிலையில் ’பருத்திவீரன்’ பிரச்சனையின் போது சிவசக்தி பாண்டியன் தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தார் என்பதும், இந்த பிரச்சனையை தீர்த்து வைத்ததில் இவருடைய பங்கும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments